அந்த 44 பேரை உங்களுக்கு தெரியுமா? 1968 ம் ஆண்டு, படித்திருக்கீறீர்களா வெண்மனியை? 38 ஆண்டுகளுக்கு முன் டிசம்பர் 25ம் தேதி, இரவு 8 மணிக்கு தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மனிக்குள் நுழைந்தன போலீசு வண்டிகள். வண்டிகளிலிருந்து கட்டைகளோடும், அரிவாள்களோடும் குதித்த குண்டர்கள் கையில் கிடைத்தவர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தார்கள்.இரத்தம் பீறிடுவதை கண்ட பெண்களின் ஓலத்தால் பீதியடைந்த குழைந்தைகளும் அச்சத்தால் வீறிட்டு அலறின. ஒன்றும் புரியாத ஆண்களும், பெண்களும், வயசாளிகளும் தெறித்து ஓடினார்கள். வயல்களிலும் தோப்புகளிலும் ஒளிந்து கொண்டார்கள். எங்கும் ஓட முடியாத அவர்கள் மட்டும் அந்த வீட்டிற்குள் நுழைந்து கதவை தாளிட்டு கொண்டார்கள். வெளியில் நின்று கொண்டிருந்த கொலைகாரக் கும்பல் குடிசையில் தீயை கொளுத்தி போட்டது. குடிசையை தளுவிய தீ ஜீவாலை விட்டெரிந்தது. பின் மெல்ல மெல்ல தனிந்து அடங்காத கங்குகளாய் குமுறிக் கொண்டிருந்தது. வயல்களிலும் தோப்புகளிலும் ஒளிந்திருந்தவர்கள் ஊருக்கு திரும்பினார்கள். ஓப்பாரிகளாலும், நெஞ்சை பிழிந்து அழுகையை தூண்டிவிடும் அழுகைகளாலும், நெஞ்சை அறுக்கும் துயர ஓலத்தில் மூழ்கியது வெண்மனி.
ஆண்களும் பெண்களும்(கர்ப்பினிகளும்), குழந்தைகளுமாக மொத்தம் 44 உயிர்கள் துடிதுடித்து அடங்கியிருந்தன. காற்று கணத்த வெப்பத்தோடு நகர்ந்தது வானம் துக்கத்தால் கருமேகத்தை சூட்டிக் கொண்டது. தமிழகமே உறைந்தது. தொழிலாளிகள், விவசாயிகளின் வீடுகள் சாவு வீடுகளாயின. எரிந்து அனையாத வெண்மனி கங்குகள் உழைக்கும் வர்க்கத்தின் நெஞ்சில் கோபத்தீயை விதைத்தது. இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட தெலுங்கானா, நக்சல்பரி, பெல்ச்சியை தொடர்ந்து வெண்மனியும் தன்னை வர்க்க போரில் களத்தில் பதித்து கொண்டது.
போலீசும், நில்பிரபுக்களும் சேர்ந்துக் கொண்டு நட்த்திய இந்த கொலை வெறியாட்டத்தில் முக்கிய் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட நிலப்பிரபு கோபாலகிருஷ்ணன் பத்தே நாளில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டான். மானங்கெட்ட கல்லுளி மங்கன்களான போலி கம்யூனிஸ்டுகள் மீண்டும் ஆண்டான்களின் ஏவல்லாளன நீதி மன்றத்தை அனுகினார்கள். புரட்சியாளர்களோ கோபல்கிருஷ்ணனை உரிய இடத்திற்கு, உரிய முறையில் அனுப்பி வைத்தார்கள் வெண்மனி மடியவில்லை நக்சல்பரியாக விடிந்தது.
இன்று 38 ஆண்டுகள் ஓடி விட்டன, போலி கம்யூனிஸ்டு பொறுக்கிகளும்(ஓட்டுதான்) பிழைப்புவாத தலித்திய அமைப்புகளும் தத்தமது வழிகளில் வர்க்க போரில் சமரசமின்றி போரிட்டு மடிந்த தியாகச்சுடர்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்கள். போலிகள் வெண்மனிச் சம்பவத்தை வெறும் கூலி உயர்வு பிரச்சனையாக மட்டுமே பார்க்கிறார்கள். கூலி உயர்வும் பிரச்சனைதான், ஆனால் அது மட்டுமல்ல. தலிதிய அமைப்புகளோ வெண்மனியை சாதி ஒடுக்குமுறையாக மட்டுமே பார்க்கிறார்கள், சாதியும் பிரச்சனைதான், ஆனால் சாதி மட்டுமல்ல பிரச்சனை.
வர்க்கம், வர்க்கப் போராட்டம்தான் முக்கிய பிரச்சனை. விவசாயிகள் வர்க்க ரீதியாக திரண்டு சங்கமாவதையும், உரிமைகளை துணிவோடு கேட்பதையும் விரும்பாத நிலபிரபுக்களின் பயத்திலும், இன்று உரிமையை கேட்பவர்கள் நாளை உரிமையை பறிப்பார்கள் என்ற பயத்திலும், வர்க்க வெறுப்பிலும்தான் வெண்மனி சிவந்தது. நிலபிரபுக்களின் வர்க்க நலன் வெண்மனியை எரித்தது, வெண்மனி எரிக்கப்பட்டாலும் கருகவில்லை, செங்கதிராய் விளைந்தது ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக புரட்சியாளர்கள் நிலபிர்புக்களை களையெடுத்தார்கள். பிறகு நிலபிரபுக்கள், முதலாளிகளின் நலனுக்காக அப்பு, பாலனிலிருந்து நூற்றுக்கணக்கான தோழர்கள் வர்க்க போரில் வீரமரணம் எய்தினார்கள். இது வர்க்கப் போராட்டம். பாட்டாளி வர்க்கம் ஒழிந்து போகும் வரை இந்த போர் நீடிக்கும்.
வர்க்கப் போரட்டமென்பது மேற்கண்டவாறுதான் நடக்க வேண்டுமென்றில்லை. உங்களுடைய கருத்துக்களிலும், கண்ணோட்டத்திலும் கூட தினமும் வர்க்கப் போராட்டம் நடக்கிறது. உங்களுடைய மேலதிகாரியிடம் நல்ல பெயரெடுக்க கடுமையாக் உழைப்பதும், பலன் கிட்டாமல் போகும்போது அவர் மீது வெறுப்படைவதும், பிறகு அவர் கூறும் வேலைகளை விருப்பின்றி செய்வதும் கூட கருத்தளவில் வர்க்கப்போர்தான். 'INFOSYS நாராயனமூர்த்தி' யாக தன்னை கனவு காண்பதும், கம்பெனியை நினைத்தாலே வெறுப்படைவதும், நினைக்காமலிருக்கவே விரும்புவதிலும் வர்க்கமிருக்கிறது. மொத்த ப்ரோகரம்களை அழித்ததும், டைடல் பார்க் மாடியிலிருந்து விழுந்ததும், சென்னை IQ BPO வில் நடந்ததும் கூட வர்க்கப் போராட்டங்கள்தான். எனவே ஒவ்வொரு கணமும்தான் உங்கள் வர்க்கம் பற்றி பிரங்ஞை கொள்ளுங்கள்.
வெண்மனி வெறும் கூலிப்பிரச்சனையோ, சாதிப் பிரச்சனையோ மட்டுமல்ல வர்க்கப் பிரச்சனை, வர்க்கப் போரட்டம். தீயிட்டாலும் கருக்காத வெண்மனி செங்கதிர்களின் தியாகத்திலிருந்து வர்க்க உணர்வை பெற்று ஒவ்வொருவரையும் உந்தித் தள்ளுவோம் வர்க்கப் போரட்டத்திற்குள், தீதான் அணைந்திருக்கிறது, கங்குகள் இன்னமும் குமுறிக் கொண்டிருக்கின்றன.
Monday, December 25, 2006
Friday, December 22, 2006
கேட்டும் கிழவியும், கொஞ்சுன்டு ஈரப்பசையும்....
மாநகராட்சி பள்ளி
வாயிலில் கூடைக்குள்
டை வைத்திருக்கும் கிழவி,
கடைக்குள்
காயும் கொய்யா,
வறன்ட நெல்லி,
வதங்கி கருத்த நவா,
தோல் சுருங்கிய மாம்பழம்.
உயிரற்ற கேட்டருகே உயிருள்ள கிழவி.
சரசரக்கும் வாகனங்கள்,
நிறுத்தத்தில் நிற்க்கும் உயிர்கள்,
அலைந்து திரியும் பார்வைகள் உயிருள்ள ஜீவனில்
உயிர்ப்பின்றி நகர்கிறது உயிரை உயிரற்றதாய் பதிவு செய்து..
உயிரற்ற கேட்டின் பாதியாகிவிட்ட
உயிரின் முன்னால் நேர் எதிர்த்திசைகளை கடக்கும்
உயிர்களின் எண்ணிக்கை இப்பொழுது எத்தனை லட்சத்து எத்தனையோ? எண்ணிக்கை பெருக்கல் விகிதத்தில் உயர்கிறது.
கடைக்குள் எஞ்சியுள்ளது
மறுநாள் வெயிலுக்காக விற்காத பழங்களில் ஈரம்.......
வாயிலில் கூடைக்குள்
டை வைத்திருக்கும் கிழவி,
கடைக்குள்
காயும் கொய்யா,
வறன்ட நெல்லி,
வதங்கி கருத்த நவா,
தோல் சுருங்கிய மாம்பழம்.
உயிரற்ற கேட்டருகே உயிருள்ள கிழவி.
சரசரக்கும் வாகனங்கள்,
நிறுத்தத்தில் நிற்க்கும் உயிர்கள்,
அலைந்து திரியும் பார்வைகள் உயிருள்ள ஜீவனில்
உயிர்ப்பின்றி நகர்கிறது உயிரை உயிரற்றதாய் பதிவு செய்து..
உயிரற்ற கேட்டின் பாதியாகிவிட்ட
உயிரின் முன்னால் நேர் எதிர்த்திசைகளை கடக்கும்
உயிர்களின் எண்ணிக்கை இப்பொழுது எத்தனை லட்சத்து எத்தனையோ? எண்ணிக்கை பெருக்கல் விகிதத்தில் உயர்கிறது.
கடைக்குள் எஞ்சியுள்ளது
மறுநாள் வெயிலுக்காக விற்காத பழங்களில் ஈரம்.......
சிவப்பதிகாரம்: நடுத்தர வர்க்க புலம்பல்
"பாராளுமன்றம் பன்றித் தொழுவம்" - லெனின்
தமிழக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்கும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த ஓட்டு பொறுக்கிகளை ஒவ்வொருவராக கொலை செய்யும் சத்யா(விஷால்) நான்காவது வேட்பாளரை கொலை செய்யும் போது மாட்டிக்கொள்கிறான். பிறகு வசனம் பேசுகிறான். சத்யாவுக்கு உதவியாக இருந்த அவனுடைய கல்லூரி பேராசிரியரும்(ரகுவரன்) மாட்டிக் கொள்ளிகிறார்(கிராமத்தில்). பிறகு அவரும் கதை சொல்கிறார், போலீசு கேட்கிறது. கோடம்பாக்கம் சினிமாத்தனம்..
கல்லூரி மாணவர்களிடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட ஒரு தொகுதியை பற்றிய கருத்துகணிப்பை சேகரிக்கும் வேலையை கொடுக்கிறார் பேராசிரியர், மாணவர்களும் வாக்காளர்களிடம் செல்கிறார்கள், கருத்துக்களை தொகுக்கிறார்கள். மாணவர்களுடைய கருத்துக்கணிப்பு கல்லூரியின் பெயரில் பத்திரிக்கையில் வெளியாகிறது.
தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளர் படுதோல்வியடைகிறான். கருத்துகணிப்பை வெளியிட்டு தன் வாழ்வை நாசமாக்கிய மாணவர்களை பழிவாங்க எண்ணி தன்னுடைய அரசியல் பலத்தால் போலீசை ஏவி விட்டு கல்லூரிக்குள் கலவரத்தை உருவாககுகிறான். போலீசிடமிருந்து தப்பிக்க ஒரு வகுப்பறைக்குள் ஒளிந்து கொள்ளும் மாணவர்களை மொத்தமாக தீ வைத்து கொழுத்தப்படுகிறார்கள். மொத்தம் நாற்பதுக்கு மேற்ப்பட்ட மாணவர்கள் இறந்து போகிறார்கள். இந்த இடத்தில்தான் சத்யாவுக்கு சமூக அக்கறை சுரக்கத் துவங்குகிறது.
பிறகு பேராசிரியரோடு சேர்ந்து கொண்டு மொத்த ஓட்டு பொறுக்கிகளையும் வேட்டையாடுகிறான் இறுதியில் போலீசிடம் மாட்டிக்கொள்கிறான். பிறகு உச்சஸ்தாயில் பேசத்துவங்குகிறான் தியேட்டர் அமைதியாகிறது "நம்ம நாடு முன்னேறாம இருக்கிறதுக்கு காரணம் இது போன்ற அரசியல்வாதிகள்தான், பல பேர் அரசியலே வேண்டாமென்று ஒதுக்குவதற்கும் இவர்கள்தான் காரணம். மக்கள் தங்கள் உரிமைகளை பயன்படுத்தி இது போன்ற கிருமிகளை தண்டிக்கனுமே தவிர ஒதுங்கிபோகக் கூடாது, எல்லோரும் ஓட்டுப் போடனும், ஓட்டுப்போடுவதை சட்டமாக்க வேண்டும், ஓட்டுபோடுவதை கட்டாயப்ப்டுத்த வேண்டும்.(ராமதாசுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்) யாருக்குமே ஓட்டுப் போட விருப்பமில்லை என்றால் தேசியகொடி சின்னத்தில் அந்தந்த மாவட்ட கலெக்டெருக்கு ஓட்டுப் போடுங்க. ஓரு டாக்டராகனும்னா MBBS தகுதி வேனும், வக்கீலாகனும்னா சட்டம் படிக்கனும், கலெக்டராகனும்னா IAS படிக்கனும், கிளார்க்காகனும்னா கூட ஒரு டிகிரி தகுதி வேனுங்கிற நாட்டில், நாட்டையே ஆளப்போகிற அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியுமே வேணாமா சார்? மக்களை கொள்ளையடிக்கிற, முட்டாளாக்குகிற அரசியல்வாதிகள் இருக்க கூடாது அதனாலதான் கொலை பண்ணினேன் என்று நிறுத்தி தாழ்ந்த ஸ்தாயிக்கு இறங்கி போலீசையும், நம்மையும் பார்த்து "ஏதாவது பண்ணுங்க சார்" என்று கூறும் போது 'அடச்சீ' இதைக் கேட்கவா இங்கே வந்தோம் என்று பார்வையாளன் சலிப்புறுகிறான், ஏனெனில்
* முதலாவதாக அனைத்து கட்சிகளும் பிழைப்புவாத, பொறுக்கி கட்சிகள்தான், கிரிமினல்கள் ரவுடிகள் இல்லாத கட்சி எதுவுமில்லை என்பது வாக்காளனுக்கு தெரியும். அதிலொன்றும் புதுமையில்லை.
* இரண்டாவதாக அரசியல்வாதிகள் படித்திருக்க வேண்டும் என்கிறார்.. நேரு, இந்திரா துவங்கி ராஜீவ், சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம், அத்வானி, வாஜ்பாய், யெச்சூரி, பரதன், பிரகாஷ் காரத், கருணாநிதி, ஜெயா, வை.கோ, அன்புமனி, தயாநிதி வரையிலான யாருமே படிக்காத 'கூமுட்டைகள்' அல்ல, எல்லோரும் படித்த அறிவாளிகள்தான் அல்லது இன்னும் சிறப்பாக கணினி யுக கல்வியை கற்றுக் கொண்டு பாராளுமன்றம் போனால் அடகுபோன பன்றித் தொழுவத்தை மீட்டுவிட முடியுமா?, அல்லது பன்றிகள்தான் பசுவாகி விடுமா?, எதற்காக அரசியல்வாதிகள் படித்திருக்க வேண்டும் என்கிறார். படித்தவரகள் திருடமாட்டார்களா?, அல்ஜீரியா ஒரு நாடா, கண்டமா என்று கூட தெரியாமல் அமெரிக்காவில் இருக்கிறதே 'புஷ்' அது படித்ததா, படிக்காததா?.
* அடுத்து யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தேசியகொடி சின்னத்தில் கலெக்டெருக்கு ஓட்டுப் போடட்டும் என்கிறார் இயக்குநர். ஆட்சியருக்குள்ள அதிகாரம் பற்றியும், அந்த பதவியிலிருந்து கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை பற்றியும் நாம் கூற வேண்டியதில்லை ஏனெனில் அதற்கான பதில் படத்திலேயே இருக்கிறது. பேராசிரியர் ரகுவரன் ஒரு முன்னாள் கலெக்டெர் நேர்மையாக நடந்துக் கொள்ள முயன்று பத்து இடங்களுக்கு மேல் மாற்றலாகி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேராசிரியர் ஆனவர். பிறகு ஏன் ஆட்சியருக்கு வாக்களிக்க வேண்டும்?
*அடுத்து ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்கி சட்டமியற்ற வேண்டும். ஓட்டு போடாதவர்களுக்கு இந்திய குடிமகனுக்குள்ள சலுகைகளை பறிக்க வேண்டும், வாக்களிக்காததை குற்றமாக கருத வேண்டும் என்றெல்லாம் கூறுவது பச்சையான ஜனநாயக விரோத கருத்துக்கள். நாம் நலிந்து போயிருப்பதை கண்டு, நம் மீதுள்ள அதீத அக்கறையால் மலத்தை சோறு என்று கூறி நம் மீது தினிக்க்கிறார் இயக்குநர். அவருக்கு மூக்கு இல்லாவிட்டால் நாம் என்ன செய்வது? நமக்கு நாற்றம் குடலை புரட்டுகிறதே.
ஆக பிரச்சனைக்கு தீர்வு சொல்லமல் 'ஏதாவது செய்ங்க சார்' என்று கையை விரிப்பதும், தன்னை சுற்றி எந்த பிரச்சனையும் இருக்க கூடாது எல்லாமே சரியாக இருக்க வேண்டும் ஆனால் அதற்க்காக நான் எதையும் செய்யமாட்டேன் என்று கூறி ஒதுங்கிக் கொள்வதும், இரத்தமும், சதையும், மலமும், சளியுமாக நாறிக் கொண்டிருக்கும் இந்த மலக் குட்டை சமூகத்திலேயே புரண்டு புரண்டு எழுவதும் அவ்வப்போது சிறு சிறு முனகல்கள், புலம்பலகள், இரக்கங்களோடு நிறுத்திக் கொள்வதையே சமூக அக்கறையாக கருதுபவர்களின் திரை வ்டிவ புலம்பல்தான் 'சிவப்பதிகாரம்'. அந்த புலம்பலும், முனகலும் கூட மக்களின் சகிக்க முடியாத வாழ்நிலையை பார்த்து வந்ததல்ல, மாறாக தன்னுடைய நலன்களிலிருந்து வருகிறது, தன்னுடைய நலனாக(சிறியதாகவும் இருக்கலாம்) இருந்தாலும் அதற்காக தான் இறங்க முடியாது அதுவாகவே நட்க்கலாம், நாலு பேர் செய்யாமலா போய் விடுவார்கள் என்பதால் அது புலம்பலாகவே அடங்கிவிடுகிறது. மக்கள் மீது ஏற்படும் அளவற்ற அன்பினாலும், இரக்கத்தாலும் ஏற்ப்படுவது புலம்பலாக இருக்காது, அது கடுஞ்சினமாக இருக்கும். அது தீர்வைத் தேடும். பிறகு குத்தீட்டியின் வேகத்தோடும், கூர்மையோடும் தன் இலக்கை நோக்கி பயனிக்கும். புலம்பல் மடியும் சினம் வெல்லும். எனவே பதிவுகளுக்கு எதிர்வினை என்ற பெயரில் COMMENT அடித்து சமூக சொரனையற்று கிடக்கும், விலங்கு தன்மையை மட்டுமே இழந்துள்ள பதர்களைப் போலின்றி மனிதத் தன்மையை உணர்ந்த மனிதர்களாக சினம் கொள்ள பழகுவோம்..
தமிழக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்கும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்த ஓட்டு பொறுக்கிகளை ஒவ்வொருவராக கொலை செய்யும் சத்யா(விஷால்) நான்காவது வேட்பாளரை கொலை செய்யும் போது மாட்டிக்கொள்கிறான். பிறகு வசனம் பேசுகிறான். சத்யாவுக்கு உதவியாக இருந்த அவனுடைய கல்லூரி பேராசிரியரும்(ரகுவரன்) மாட்டிக் கொள்ளிகிறார்(கிராமத்தில்). பிறகு அவரும் கதை சொல்கிறார், போலீசு கேட்கிறது. கோடம்பாக்கம் சினிமாத்தனம்..
கல்லூரி மாணவர்களிடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட ஒரு தொகுதியை பற்றிய கருத்துகணிப்பை சேகரிக்கும் வேலையை கொடுக்கிறார் பேராசிரியர், மாணவர்களும் வாக்காளர்களிடம் செல்கிறார்கள், கருத்துக்களை தொகுக்கிறார்கள். மாணவர்களுடைய கருத்துக்கணிப்பு கல்லூரியின் பெயரில் பத்திரிக்கையில் வெளியாகிறது.
தேர்தலில் ஆளும்கட்சி வேட்பாளர் படுதோல்வியடைகிறான். கருத்துகணிப்பை வெளியிட்டு தன் வாழ்வை நாசமாக்கிய மாணவர்களை பழிவாங்க எண்ணி தன்னுடைய அரசியல் பலத்தால் போலீசை ஏவி விட்டு கல்லூரிக்குள் கலவரத்தை உருவாககுகிறான். போலீசிடமிருந்து தப்பிக்க ஒரு வகுப்பறைக்குள் ஒளிந்து கொள்ளும் மாணவர்களை மொத்தமாக தீ வைத்து கொழுத்தப்படுகிறார்கள். மொத்தம் நாற்பதுக்கு மேற்ப்பட்ட மாணவர்கள் இறந்து போகிறார்கள். இந்த இடத்தில்தான் சத்யாவுக்கு சமூக அக்கறை சுரக்கத் துவங்குகிறது.
பிறகு பேராசிரியரோடு சேர்ந்து கொண்டு மொத்த ஓட்டு பொறுக்கிகளையும் வேட்டையாடுகிறான் இறுதியில் போலீசிடம் மாட்டிக்கொள்கிறான். பிறகு உச்சஸ்தாயில் பேசத்துவங்குகிறான் தியேட்டர் அமைதியாகிறது "நம்ம நாடு முன்னேறாம இருக்கிறதுக்கு காரணம் இது போன்ற அரசியல்வாதிகள்தான், பல பேர் அரசியலே வேண்டாமென்று ஒதுக்குவதற்கும் இவர்கள்தான் காரணம். மக்கள் தங்கள் உரிமைகளை பயன்படுத்தி இது போன்ற கிருமிகளை தண்டிக்கனுமே தவிர ஒதுங்கிபோகக் கூடாது, எல்லோரும் ஓட்டுப் போடனும், ஓட்டுப்போடுவதை சட்டமாக்க வேண்டும், ஓட்டுபோடுவதை கட்டாயப்ப்டுத்த வேண்டும்.(ராமதாசுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்கும்) யாருக்குமே ஓட்டுப் போட விருப்பமில்லை என்றால் தேசியகொடி சின்னத்தில் அந்தந்த மாவட்ட கலெக்டெருக்கு ஓட்டுப் போடுங்க. ஓரு டாக்டராகனும்னா MBBS தகுதி வேனும், வக்கீலாகனும்னா சட்டம் படிக்கனும், கலெக்டராகனும்னா IAS படிக்கனும், கிளார்க்காகனும்னா கூட ஒரு டிகிரி தகுதி வேனுங்கிற நாட்டில், நாட்டையே ஆளப்போகிற அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியுமே வேணாமா சார்? மக்களை கொள்ளையடிக்கிற, முட்டாளாக்குகிற அரசியல்வாதிகள் இருக்க கூடாது அதனாலதான் கொலை பண்ணினேன் என்று நிறுத்தி தாழ்ந்த ஸ்தாயிக்கு இறங்கி போலீசையும், நம்மையும் பார்த்து "ஏதாவது பண்ணுங்க சார்" என்று கூறும் போது 'அடச்சீ' இதைக் கேட்கவா இங்கே வந்தோம் என்று பார்வையாளன் சலிப்புறுகிறான், ஏனெனில்
* முதலாவதாக அனைத்து கட்சிகளும் பிழைப்புவாத, பொறுக்கி கட்சிகள்தான், கிரிமினல்கள் ரவுடிகள் இல்லாத கட்சி எதுவுமில்லை என்பது வாக்காளனுக்கு தெரியும். அதிலொன்றும் புதுமையில்லை.
* இரண்டாவதாக அரசியல்வாதிகள் படித்திருக்க வேண்டும் என்கிறார்.. நேரு, இந்திரா துவங்கி ராஜீவ், சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம், அத்வானி, வாஜ்பாய், யெச்சூரி, பரதன், பிரகாஷ் காரத், கருணாநிதி, ஜெயா, வை.கோ, அன்புமனி, தயாநிதி வரையிலான யாருமே படிக்காத 'கூமுட்டைகள்' அல்ல, எல்லோரும் படித்த அறிவாளிகள்தான் அல்லது இன்னும் சிறப்பாக கணினி யுக கல்வியை கற்றுக் கொண்டு பாராளுமன்றம் போனால் அடகுபோன பன்றித் தொழுவத்தை மீட்டுவிட முடியுமா?, அல்லது பன்றிகள்தான் பசுவாகி விடுமா?, எதற்காக அரசியல்வாதிகள் படித்திருக்க வேண்டும் என்கிறார். படித்தவரகள் திருடமாட்டார்களா?, அல்ஜீரியா ஒரு நாடா, கண்டமா என்று கூட தெரியாமல் அமெரிக்காவில் இருக்கிறதே 'புஷ்' அது படித்ததா, படிக்காததா?.
* அடுத்து யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தேசியகொடி சின்னத்தில் கலெக்டெருக்கு ஓட்டுப் போடட்டும் என்கிறார் இயக்குநர். ஆட்சியருக்குள்ள அதிகாரம் பற்றியும், அந்த பதவியிலிருந்து கொண்டு என்ன செய்ய முடியும் என்பதை பற்றியும் நாம் கூற வேண்டியதில்லை ஏனெனில் அதற்கான பதில் படத்திலேயே இருக்கிறது. பேராசிரியர் ரகுவரன் ஒரு முன்னாள் கலெக்டெர் நேர்மையாக நடந்துக் கொள்ள முயன்று பத்து இடங்களுக்கு மேல் மாற்றலாகி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பேராசிரியர் ஆனவர். பிறகு ஏன் ஆட்சியருக்கு வாக்களிக்க வேண்டும்?
*அடுத்து ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்கி சட்டமியற்ற வேண்டும். ஓட்டு போடாதவர்களுக்கு இந்திய குடிமகனுக்குள்ள சலுகைகளை பறிக்க வேண்டும், வாக்களிக்காததை குற்றமாக கருத வேண்டும் என்றெல்லாம் கூறுவது பச்சையான ஜனநாயக விரோத கருத்துக்கள். நாம் நலிந்து போயிருப்பதை கண்டு, நம் மீதுள்ள அதீத அக்கறையால் மலத்தை சோறு என்று கூறி நம் மீது தினிக்க்கிறார் இயக்குநர். அவருக்கு மூக்கு இல்லாவிட்டால் நாம் என்ன செய்வது? நமக்கு நாற்றம் குடலை புரட்டுகிறதே.
ஆக பிரச்சனைக்கு தீர்வு சொல்லமல் 'ஏதாவது செய்ங்க சார்' என்று கையை விரிப்பதும், தன்னை சுற்றி எந்த பிரச்சனையும் இருக்க கூடாது எல்லாமே சரியாக இருக்க வேண்டும் ஆனால் அதற்க்காக நான் எதையும் செய்யமாட்டேன் என்று கூறி ஒதுங்கிக் கொள்வதும், இரத்தமும், சதையும், மலமும், சளியுமாக நாறிக் கொண்டிருக்கும் இந்த மலக் குட்டை சமூகத்திலேயே புரண்டு புரண்டு எழுவதும் அவ்வப்போது சிறு சிறு முனகல்கள், புலம்பலகள், இரக்கங்களோடு நிறுத்திக் கொள்வதையே சமூக அக்கறையாக கருதுபவர்களின் திரை வ்டிவ புலம்பல்தான் 'சிவப்பதிகாரம்'. அந்த புலம்பலும், முனகலும் கூட மக்களின் சகிக்க முடியாத வாழ்நிலையை பார்த்து வந்ததல்ல, மாறாக தன்னுடைய நலன்களிலிருந்து வருகிறது, தன்னுடைய நலனாக(சிறியதாகவும் இருக்கலாம்) இருந்தாலும் அதற்காக தான் இறங்க முடியாது அதுவாகவே நட்க்கலாம், நாலு பேர் செய்யாமலா போய் விடுவார்கள் என்பதால் அது புலம்பலாகவே அடங்கிவிடுகிறது. மக்கள் மீது ஏற்படும் அளவற்ற அன்பினாலும், இரக்கத்தாலும் ஏற்ப்படுவது புலம்பலாக இருக்காது, அது கடுஞ்சினமாக இருக்கும். அது தீர்வைத் தேடும். பிறகு குத்தீட்டியின் வேகத்தோடும், கூர்மையோடும் தன் இலக்கை நோக்கி பயனிக்கும். புலம்பல் மடியும் சினம் வெல்லும். எனவே பதிவுகளுக்கு எதிர்வினை என்ற பெயரில் COMMENT அடித்து சமூக சொரனையற்று கிடக்கும், விலங்கு தன்மையை மட்டுமே இழந்துள்ள பதர்களைப் போலின்றி மனிதத் தன்மையை உணர்ந்த மனிதர்களாக சினம் கொள்ள பழகுவோம்..
Subscribe to:
Posts (Atom)